தமிழ் செய்திகள்|திருப்பூரில் உணவின்றி போராடிவரும் வெளிமாநில தொழிலாளர்கள்

ஊரடங்கின் காரணமாக வறுமையில் வாடும் வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் போராட்டம்


கொரோனாவின் காரணமாக தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இதன் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து வந்து இங்கே  தங்கியுள்ள தொழிலாளர்கள் பலரும் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது 

மேலும் இங்கே தாங்கள் உணவின்றி தவிப்பதாகவும் ஊடங்களில் பேட்டி அளித்து வந்தனர் .அரசும் பல்வேறு இடங்களில் அவர்களுக்கு உதவி செய்து வரும் நிலையிலும் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுமார் 400 பேர் திரண்டு சமீபத்தில் போராடி வருகின்றனர் .

ஏற்கனவே பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அரசு ரயில்களை இயக்கி வருகிறது இந்த சூழலில் நடந்து வரக்கூடிய இந்த போராட்டத்தின் விளைவாக இவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்களா? என்பதை அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்