Tamil News| செய்திகள்| தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3000 பேர்களைக் கடந்தது



             மூவாயிரத்தைத்  தாண்டியது தமிழகத்தில் கொரோனான் பாதிப்பு .
உலகில் உள்ள பல நாடுகளில் தனது கைவரிசையை காட்டி வந்து கொண்டிருக்கக்கூடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கை வைத்திருக்கிறது .


            குறிப்பாகத் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்குநாள் நாள் அதிகரித்து வருகிறது. எனினும் கொரோனா ஒழிப்புக்கான அரசினுடைய தீவிரமான முயற்சியின் காரணமாக குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கிறது


             கடந்த ஒரு வாரமாகத்தான் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக வடசென்னை அதனை ஒட்டிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடிய சூழல் நிலவி வருகிறது


              எனினும் நிலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு தனி அலுவலரை நியமித்து தீவிரமாக முயன்று வருகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் வீடுகளுக்குள் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் வெளியே வந்து வீடு திரும்பினால் மிக விரைவில் நாம் கொரோனாவை இந்தியாவை விட்டே விரட்டி விடலாம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்