Tamil News|சென்னையில் கர்ப்பிணிப்பெண் கொரனாவால் மரணம்

         


         சென்னையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கொரானா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார் .



         ஏற்கனவே தமிழக அளவில் எடுத்துக் கொண்டால் சென்னையில்தான் கொரானா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை, அண்ணா நகர் ,அடையார் போன்ற பகுதிகளில் சமீபகாலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .

இந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 27 வயதான இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவர் பிரசவத்தின்போது இறந்ததாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 இந்த நிலையில் அவருக்கு பிறந்த குழந்தையின் சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். அப்போது அவருக்கு நோய் தொற்று இருப்பதாக அறிவிக்கப்படவில்லை பிறகு இறந்த உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர். அதன் பிறகுதான் அவருக்கு கொரானா தோற்றிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது

     இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்த குறித்த விவரங்களும் மருத்துவம் பார்த்த மருத்துவர் குறித்த விவரங்களும் நல்லடக்கத்தின் போது கலந்துகொண்டவர்கள் விவரங்களும் அரசு சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

        இந்த பட்டியல் தயாரான பிறகு இவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு அதில் வரக்கூடிய உறுதிப்படுத்துதலின் அடிப்படையில் தொற்று அதிகமாக உள்ளதா? குறைவாக உள்ளதா ?என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் .இதனால் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்