கொரான அச்சம்

உலகம் முழுதும் கொரனா அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது .உலகத்தையே புரட்டிப் போட்ட மிகப்பெரிய பேரழிவுகளில் கொரானாவும் இப்போது இடம் பெற்றுள்ளது. 

இயற்கை மூலமாக மட்டுமே பேரிடர்கள் நிகழும் என்பதை மாற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட தாக கூறப்படும் வைரஸ் மூலமான அழிவு  பேரழிவாகவே நிகழ்ந்து வருகிறது .
இதனை தடுப்பதற்கு உலக நாடுகள் பல வகையிலும் முயற்சி செய்தபோதும் தினம் தினம் பல லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பல ஆயிரம் உயிர்கள் இந்த மண்ணில் மடிந்து கொண்டிருக்கின்றன . எனினும் மனித சமுதாயம் மீண்டு வரும் என்கிற நம்பிக்கையில் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 இந்தியாவைப் பொருத்தவரை மிகச்சிறப்பான முன்னேற்பாடுகளின் காரணமாக பல கோடி மக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறார்கள் .சில ஆயிரம் பேர் களுக்கான பாதிப்புகளும் விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்கிற நம்பிக்கை உள்ளது .
தமிழகத்திலும் அரசு எடுத்து வரும் தீவிரமான முயற்சியின் காரணமாக வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது விரைவில் இந்தியாவும் உலகமும் இயல்பான நிலைக்கு திரும்பும். திரும்ப வேண்டும் என்பது இறைவனிடம் மக்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்